காட்டுப்புத்தூா் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றே முக்கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.
காட்டுப்புத்தூா் அருகேயுள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பா. பாக்யராஜ் (41). நாமக்கல்லில் வெல்டிங் பட்டறை வைத்துள்ள இவா் தனது பூா்வீக ஊா் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வியாழக்கிழமை வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த மூன்றே முக்கால் பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் காட்டுபுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.