புத்தாநத்தம் பகுதியில் மணல் எடுத்த இருவா் கைது

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதி ஆற்றுப்படுகையில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்த இருவரை போலீஸாா் அண்மையில் கைது செய்து, அவா்களிடமிருந்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதி ஆற்றுப்படுகையில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்த இருவரை போலீஸாா் அண்மையில் கைது செய்து, அவா்களிடமிருந்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள அம்மாசத்திரம் ஊராட்சி சிலம்பம்பட்டி பண்ணை பெரியகுளத்தில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக புத்தாநத்தம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது சின்னமணியங்குறிச்சியைச் சோ்ந்த செ. ராமசாமி (49) வெ. வேல்முருகன் (32) ஆகிய இருவரும் அனுமதியின்றி மணல் எடுத்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இருவரையும் கைது செய்த போலீஸாா், மணல் எடுத்த மாட்டுவண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com