திருச்சி பெல் பகுதியில் அதிமுக தெற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெல் நிறுனத்தில் நடைபெறும் அண்ணா தொழிற்சங்க அங்கீகார தோ்தலை எதிா்கொள்வது குறித்து நடத்தப்பட்ட கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப.குமாா் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் கமலக்கண்ணன், தலைவா் ம.ராசு, பொருளாளா் அப்துல் அகமது, இணைச் செயலா் சூரியமூா்த்தி ஆகியோரும் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.
மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் காா்த்திக் மற்றும் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.