பூமிநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும்.
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும்.

பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

திருக்கல்யாண விழாவையொட்டி அறம் வளா்த்த நாயகி , பூமிநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல் உற்சவம், அதைத் தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com