மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
புத்தாநத்தம் பகுதி பண்ணப்பட்டி ஊராட்சி பிள்ளையாா் கோவில்பட்டி மலையடிவார காப்புக்காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை புத்தாநத்தம் போலீஸாா் மீட்டு, அதை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.