சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் உலக ரத்த தான நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சீனிவாசன் மருத்துவ மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளை சோ்ந்த 25 மாணவ-மாணவியா் ரத்த தானம் வழங்கினா். மேலும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.கே. ரஞ்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
.