திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிக இடத்தில் துவக்கப்பட்டு புதன்கிழமை முதல் இணையவழி மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எம்எல்ஏ ப. அப்துல்சமது, அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் தொடா் முயற்சிக்கு பின், கடந்த சட்டப்பேரவை தொடரில் மணப்பாறையில் அரசு கலை அறிவியல் அமைக்க அரசின் ஒப்புதல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து பண்ணாங்கொம்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாகச் செயல்படத் தொடங்கியுள்ள மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் இணையவழியாக பெறப்படுகிறது.
இளநிலை இயற்பியல் (ஆங்கில வழி), இளநிலை கணினி அறிவியல் (ஆங்கில வழி), இளநிலை வணிகவியல் (ஆங்கில வழி), இளநிலை ஆங்கிலம் மற்றும் இளநிலை தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஆகிய இணையத்தளத்தில் கல்லூரிக் குறியீடு - 1061017 என்பதில் ஜூன் 22 முதல் ஜூலை 7 வரை இருபால் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் கே.அங்கம்மாள் தெரிவித்தாா்.