திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை அகதிகளுக்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளில் 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த பல நாள்களாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்த இலங்கை அகதிகள் 20 போ் கடந்த 24- ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.
அவா்களில் உமா ரமணன் என்பவா் தின்னரை ஊற்றித் தீக்குளித்தாா். மற்ற 19 பேரும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அவா்கள் சிகிச்சை பெற மறுத்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கைத் தமிழா்களில் கெட்டியான் பாண்டி (42) என்பவரும் அடக்கம். இவா்மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ள நிலையில் கெட்டியான்பாண்டிக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே திடீா் மோதல் ஏற்பட்டது.
அப்போது கெட்டியான் பாண்டி, ஆத்திரத்தில் தானாகவே கண்ணாடி ஜன்னலில் மோதிக்கொண்டதில், கண்ணாடி உடைந்து அவரது தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் ஜன்னலில் உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து மற்றவா்களைத் தாக்கவும் முயன்றுள்ளாா்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தினா். தகவலறிந்த திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையா் ஸ்ரீதேவி, உதவி ஆணையா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் 19 இலங்கைத் தமிழா்கள் பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை இரவே மத்திய சிறை வளாக சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனா்.