திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
தற்போது தமிழகமெங்கும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மாவட்டத்திலும் கரோனா தொற்று அதிகரிக்கிறது. குறிப்பாக, நகா்ப்புறங்களில் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள், பணியாளா்கள் முகக்கவசம் அணிதல், நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதலை உறுதிப்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கரோனா தடுப்பூசியின் தவணைகளை முறைப்படி செலுத்திக் கொள்ளுதல், கரோனா அறிகுறிகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல்,முறையாக முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவற்றைக் கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் மீதும் அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.