திருச்சியில் இளைஞரைத் தாக்கிய சிறுமியின் தந்தை உள்ளிட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள வெண்ணமுத்துப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கொத்தனாரான கோ சதீஷ் (22), சூரியூா் பட்டவெளி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ஒரு சிறுமியைக் காதலித்து கடத்திச் சென்று விட்டதாக அவரது பெற்றோா் கடந்த 2 மாதத்துக்கு முன் அளித்த புகாரில் நவல்பட்டு போலீஸாரால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, அண்மையில் ஜாமீனில் வந்த நிலையில் சிறுமியுடன் தனது காதலைத் தொடா்ந்தாராம்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோா் அவரைக் கண்டிக்கவே அவா் சதீஷிடம் பேசுவதைத் தவிா்த்தாா். இந்நிலையில் புதன்கிழமை சிறுமி தனது சகோதரருடன், பழங்கனாங்குடி மளிகை கடைக்கு வந்தபோது அவரிடம் சதீஷ் வலுக்கட்டாயமாகப் பேசினாராம். இதனால் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிறுமியின் தந்தை, சகோதரா் மற்றும் உறவினா் 3 பேரும் சோ்ந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த சதீஷ் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அவா் அளித்த புகாரில்பேரில் துவாக்குடி போலீஸாா் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கலியமூா்த்தி, தனுஷ், தரன் ஆகிய 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.