ஓய்வு பெற்ற அதிகாரிவிபத்தில் உயிரிழப்பு

திருச்சியில் சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி உயிரிழந்தாா்.

திருச்சியில் சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி உயிரிழந்தாா்.

திருச்சி பொன்மலைப்பட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன்(79), ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி. இவா் சைக்கிளில் மன்னாா்புரம் சாலை பழைய ரயில்வே பாலத்தில் வியாழக்கிழமை சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சீனிவாசனைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா். போக்குவரத்து புலனாய்வு தெற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com