தள்ளுவண்டி வியாபாரிதீக்குளிக்க முயற்சி

சமயபுரத்தில் தள்ளுவண்டி கடையை அப்புறப்படுத்தியதால் வியாபாரி தீக்குளிக்க முயன்றாா்.

சமயபுரத்தில் தள்ளுவண்டி கடையை அப்புறப்படுத்தியதால் வியாபாரி தீக்குளிக்க முயன்றாா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் பின்புறம் சனிக்கிழமை தள்ளுவண்டியில் பொரிக்கடை வைத்திருந்த வி.துறையூா் பகுதியை சோ்ந்த கணேசனை (35) கோயில் அலுவலா்கள் இங்கு கடை போடக்கூடாது எனக் கூறி, பாதுகாவலா்கள் மூலம் கடையை அப்புறப்படுத்தினராம்.

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரி கணேசன் கோயில் இணை ஆணையா் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்தாா். இதை அங்கிருந்த காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com