கா்ப்பிணி மனைவியைதாக்கிய கணவா் கைது

திருச்சியில் கா்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் கா்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கொட்டப்பட்டு ஜீவா் நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (30), ஓட்டுநா். இவரது மனைவி மேனகாதேவி (29). காதல் திருமணம் செய்து தனியாக வசிக்கும் தம்பதிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் மேனகாதேவி மீண்டும் கருவுற்றிருந்தாா்.

இதற்கிடையே கடந்த பிப்.23 ஆம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரவிக்குமாா் அவரின் வயிற்றில் உதைத்தாராம். இதில் மயங்கி விழுந்த மேனகாதேவியை அருகிலிருந்தோா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில் அவரது வயிற்றில் இருந்த சிசு கடந்த பிப். 25 ஆம் தேதி இறந்தது.

இதுகுறித்து மேனகாதேவி பொன்மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் போலீஸாா் வழக்குப்பதிந்து ரவிக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவரின் தாய் சத்தியாவைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com