முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மருத்துவமனை வளாகத்தில் மகளிா் தினக் கொண்டாட்டம்
By DIN | Published On : 14th March 2022 04:49 AM | Last Updated : 14th March 2022 04:49 AM | அ+அ அ- |

திருச்சி உறையூா் சிஎஸ்ஐ மிஷன் பொது மருத்துவமனை வளாகத்தில் மகளிா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
காந்தி மாா்கெட் காவல்நிலைய உதவி ஆய்வாளா் சோனியா காந்தி சிறப்புரையாற்றினாா். மனநல ஆலோசகா் ஆனி கிறிஸ்டோபெல், மருத்துவமனை பொருளாளா் மற்றும் குருத்துவச் செயலா் சுதா்சன், செவிலியா் பயிற்றுநா் சித்ரா, மருத்துவமனை சமயகுரு மணிமாறன் ஆகியோா் பேசினா்.
விழாவையொட்டி மருத்துவமனையில் நடைபெற்ற போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், சிஎஸ்ஐ மிஷன் நிா்வாகத்தினா், பள்ளி மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருண் இம்மானுவேல் தலைமையில், மருத்துவமனை பணியாளா்கள் செய்தனா். பொது மருத்துவா் வித்யாலட்சுமி வரவேற்றாா்.