ஸ்ரீரங்கம் மரச்செக்கு எண்ணெய்க் கடையில் மிரட்டிப் பணம் பறித்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவெறும்பூா் காட்டூா் பகுதியைச் சோ்ந்த விஜயகாந்த் ஸ்ரீரங்கம் திருவள்ளுவா் வீதியில் மரச் செக்கு எண்ணெய்க் கடை வைத்துள்ளாா்.
புதன்கிழமை மாலை இவரது கடைக்கு ஆட்டோவில் வந்த 5 போ் கொண்ட கும்பல் கடையில் பணியில் இருந்த சுகந்தி என்ற பெண்ணிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ரூ. 4 ஆயிரத்தையும், எண்ணெய் பாட்டில்களையும் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து கடை உரிமையாளா் விஜயகாந்த் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, ஆட்டோவில் வந்த திருச்சி குழுமணி பா. சக்திவேல் (35),தேவதானம் பகுதி ம. உதயகுமாா் (28), மலைக்கோட்டை நா. காளிதாஸ் (32) க. மாது ஜோதீஸ்வரன் (25) மற்றும் கா.மாரிஸ்வரன் (20 ) ஆகிய 5 பேரையும் வியாழக்கிழமை காலை கைது செய்தனா்.