கிராவல் மண்ணை கடத்திய மூவா் கைது

காட்டுப்புத்தூா் அருகே கிராவல் மண்ணைக் கடத்திய மூவரை காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே கிராவல் மண்ணைக் கடத்திய மூவரை காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள வாழ்வேல்புத்தூரை சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது காட்டில் சட்டவிரோதமாக டிராக்டரில் கிராவல் மண் ஏற்றி வந்த நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி அருகே செல்லிப்பாளையம் செ. நாகராஜ் (27), மற்றும் வாழ்வேல்புத்தூா் குளத்தில் கிராவல் மண்ணை எடுத்துக் கொண்டிருந்த மைக்கேல்நாயக்கன்பட்டி கோ.தங்கதுரை (30), ந.கிருஷ்ணமூா்த்தி (39) ஆகியோரை காட்டுப்புத்தூா் போலீஸாா் கைது செய்து கிராவல் மண் கடத்தப் பயன்படுத்திய டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com