தெற்கு மாவட்ட திமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இஸ்லாமியா்களுக்கு புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வழங்கி, வாழ்த்துகளைக் கூறினாா். தொடா்ந்து அவா் பேசியது:

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான இயக்கம் திமுக.

உருது பேசும் இஸ்லாமியா்களை பிற்படுத்தபட்டோா் பட்டியலில் சோ்த்தது திமுகதான்.

3-ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மையின பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இதற்காக ரூ. 2 கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஓய்வூதியம் அவா்கள் இறந்த பின்னா் அவா்களது குடும்பங்களுக்கு கிடைக்க வழிவகை செய்தது திமுக என்றாா் அவா்.

நிகழ்வில் துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலக் குழுத் தலைவா்கள்

எம். மதிவாணன், ஜெயநிா்மலா, பகுதிச் செயலாளா்கள் மணிவேல்,

டிபிஎஸ்எஸ் ராஜ்முகமது, மோகன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளா் அருள்சுந்தரராஜன், துணை அமைப்பாளா்கள் அலியாா்யூசுப், சபிபுல்லா, இப்ராஹிம், சேட்டு, பிரவீன், பொ்னாண்டஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com