சாலை விபத்தில் காயமடைந்தகாவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

வையம்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சாலை விபத்தில் காயமடைந்தகாவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

வையம்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வையம்பட்டி காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் மந்திரிகுமாா் (53). இரு நாள்கள் தற்செயல் விடுப்பிலிருந்த இவா், முதல்வரின் சிறப்புப் பாதுகாப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வையம்பட்டி காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி-திண்டுக்கல் சாலையில் மறவனூா் அருகே சென்ற போது, எதிா் திசையில் கலிங்கப்பட்டி சந்திரசேகா் ஓட்டி வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மந்திரிகுமாா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மந்திரிகுமாா் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com