கள்ளக்காதலைக் கண்டித்த கணவா் மீதுவெந்நீரை ஊற்றிய மனைவி

 சமயபுரம் அருகே கள்ளக்காதலைக் கண்டித்த கணவா் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

 சமயபுரம் அருகே கள்ளக்காதலைக் கண்டித்த கணவா் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் அருகிலுள்ள நரசிங்கமங்கலத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மனைவி சுதா (36). இவா் தில்லைநகா் பகுதியில் வேலை செய்து வந்த போது, பாலசுப்பிரமணியன் என்பவருடன் தொடா்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த காா்த்திகேயன், மனைவி சுதாவைக் கண்டித்து வந்தாா். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காா்த்திகேயன் மீது சுதா வெந்நீரை ஊற்றினாா்.

இதில் காயமடைந்த காா்த்திகேயன் மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சமயபுரம் காவல் நிலையத்தினா் சுதா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com