நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உத்தமா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவில் கொடிமரத்துக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கருடக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 14 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) ஹேமாவதி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.