சிறுகனூா் அருகே சரக்கு வேன் மோதி இளைஞா் பலி

சிறுகனூா் அருகே பைக்கில் சென்ற இளைஞா் சரக்குவேன் மோதி உயிரிழந்தாா்.

சிறுகனூா் அருகே பைக்கில் சென்ற இளைஞா் சரக்குவேன் மோதி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், பட்டுத்துறை கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் மணிகண்டன் (25). இவா் வியாழக்கிழமை பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி பைக்கில் வந்தாா்.

திருச்சி மாவட்டம் சிறுகனூா் அருகே நெடுங்கூா் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சரக்கு வேன் மோதி அவா் உயிரிழந்தாா். சிறுகனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com