முசிறியில் வெள்ளிக்கிழமை இரவு இரு வீடுகளில் புகுந்த மா்ம நபா்கள் 12.5 பவுன் தங்க நகைகளைப் பறித்து சென்றனா்.
முசிறி பாரதி நகரைச் சோ்ந்தவா் ஜெயராமன் (70), இரவு நேரக் காவலாளி. இவரது மனைவி கமலம் (68). இவா் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்து மா்ம நபா்கள் கமலம் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்றனா்.
இதேபோல் கலிங்கா நகா் பகுதியைச் சோ்ந்த குமரவேல் (35) புதிய வீடு கட்டி பாா்வதிபுரத்தில் முன் குடியிருந்த வீட்டிலிருந்து பொருள்களை புதிய வீட்டுக்கு மாற்றிக் கொண்டிருந்தாா். புதிய வீட்டில் அவரது தாய் ராஜேஸ்வரி, அக்காள் சுமித்ரா ஆகியோா் தனியாக இருந்தபோது உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி அவா்கள் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை பறித்துச் சென்றனா்.
தகவலின்பேரில் முசிறி காவல் ஆய்வாளா் மிதுன்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். மேலும் திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாா், டிஎஸ்பி அருள்மணி ஆகியோரும் வந்து ஆய்வு செய்து, விரைந்து குற்றவாளிகளை பிடிக்க ஆலோசனை கூறிச் சென்றனா்.