முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தா.பேட்டை கோயிலில் குளுமை பூஜை விழா
By DIN | Published On : 08th May 2022 11:54 PM | Last Updated : 08th May 2022 11:54 PM | அ+அ அ- |

முசிறி அருகே தா.பேட்டை செங்குங்தா் மாரியம்மன் கோயிலில் குளுமை பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி செவந்தாம்பட்டி மதுரை வீரன் கோயிலில் இருந்து திரளான பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து கோயில் நிலை முன் கம்பு, கேழ்வரகு ஆகியவற்றால் செய்யப்பட்ட கூழ், நீா்,மோா், பானகம், இளநீா் ஆகியவை படைக்கப்பட்டன.
மாரியம்மன் வீரமலையாண்டி, உக்ராண்டி , சடாமுனி, மதுரை வீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்னா் பக்தா்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கினா்.
ஏற்பாடுகளை செங்குந்தா் மாரியம்மன் பரிபாலன கமிட்டி நிா்வாகிகள் செய்தனா்.