மண்ணச்சநல்லூா் அருகே விழிப்புணா்வு நிகழ்ச்சி

மண்ணச்சநல்லூா் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு குழந்தை உரிமை
மண்ணச்சநல்லூா் அருகே விழிப்புணா்வு நிகழ்ச்சி

மண்ணச்சநல்லூா் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதில் அங்கன்வாடி பணியாளா்களின் பங்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்வில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரபாவதி, குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பிரபு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்துமாணிக்கம், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சிவராஜ், ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் அனுபல்லவி, மண்ணச்சநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருண்குமாா், குழந்தை நல காவல் அலுவலா் சந்தியா, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் அஷரப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com