பள்ளிக்குள் நுழைந்த கட்டுவிரியன் பிடிபட்டது

மணப்பாறை நகராட்சிப் பள்ளிக்குள் புகுந்த 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பு தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை உயிருடன் பிடிபட்டது.
பள்ளிக்குள் நுழைந்த கட்டுவிரியன் பிடிபட்டது

மணப்பாறை நகராட்சிப் பள்ளிக்குள் புகுந்த 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பு தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை உயிருடன் பிடிபட்டது.

மணப்பாறை மாரியம்மன் கோயில் பின்புறம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை கட்டுவிரியன் பாம்பு ஒன்று இரை தேடி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. இதைக் கண்ட பள்ளி ஆசிரியா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினா் இரையை தின்று நகர முடியாமல் கிடந்த 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com