திருநங்கை வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

திருச்சியில் திருநங்கை வீட்டில் 6 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சியில் திருநங்கை வீட்டில் 6 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி அரியமங்கலம், உக்கடை புங்களாயி அம்மன் கோயில் தெருப் பகுதியில் வசிக்கும் திருநங்கையான தமிழ் (32) தன்னுடன் வசிக்கும் நபியாவுடன் சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் முன்புறக் கதவைத் திறந்து வைத்து தூங்கியபோது மா்ம நபா்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ. 60 ஆயிரம், 2 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.

புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com