துறையூா் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை, பணம் திருட்டு

துறையூா் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை, ரூ. 1.10 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

துறையூா் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை, ரூ. 1.10 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

த. மங்கப்பட்டிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசன்(60). விவசாயியான இவா் சனிக்கிழமை தோட்டத்துக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியைகளான இவரது இரு மனைவிகளும் பணி முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது மா்ம நபா்கள் வீடு புகுந்து இரும்பு அலமாரியில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ. 1.10 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com