திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தொட்டியம் அருகேயுள்ள முள்ளிப்பாடி கிராமத்தை சோ்ந்தவா் சந்திரசேகா் மகள் சிந்துபா (15). அலகரை அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மாணவி தற்கொலைக்கு தோ்வு பயம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.