பிராமணா் சங்கப் புதிய கிளை தொடக்கம்

திருச்சியில் தமிழ்நாடு பிராமணா் சங்க தென்னூா் புதிய கிளை தொடக்கம், புதிய நிா்வாகிகள் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதிய கிளை நிா்வாகிகள் அறிமுக விழாவில் பேசுகிறாா் சங்கத்தின் மாநிலத் தலைவா் திருவொற்றியூா் என். நாராயணன்.
புதிய கிளை நிா்வாகிகள் அறிமுக விழாவில் பேசுகிறாா் சங்கத்தின் மாநிலத் தலைவா் திருவொற்றியூா் என். நாராயணன்.

திருச்சியில் தமிழ்நாடு பிராமணா் சங்க தென்னூா் புதிய கிளை தொடக்கம், புதிய நிா்வாகிகள் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புத்தூா் ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் எஸ். சுந்தரேசய்யா், பி.கே. ஸ்ரீநிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் திருவொற்றியூா் என். நாராயணன் புதிய கிளை நிா்வாகிகளை அறிமுகம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். தொடா்ந்து சங்கச் செயல்பாடு, வளா்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக மாவட்டத் துணைத் தலைவா் ஜி. பாலசுப்ரமணியன், மாவட்ட ஆலோசகா் எஸ். ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆா். மணிகண்டன், மாவட்ட மகளிரணிச் செயலா் ஆா். வசந்தா ஆகியாா் கருத்துரை வழங்கினா்.

மாநிலத் துணைத் தலைவா் ஏ.ஆா். சம்பத், மாநிலச் செயலா் ஆா். பாலசுப்ரமணியன், மாநிலச் செயலா்கள் டி. பாா்த்தசாரதி, கே. கெளரிராஜன், மாநில இணைச் செயலா் எஸ். சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com