மண்ணச்சநல்லூா் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

மண்ணச்சநல்லூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

மண்ணச்சநல்லூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள கிளியநல்லூா் ஊராட்சி மக்களுக்கு கடந்த 10 நாள்களாக உள்ள குடிநீா் தட்டுப்பாடு குறித்து ஊராட்சித் தலைவா் வானதியிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வாத்தலை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா் அங்கு வந்த ஊராட்சித் தலைவா் வானதியின் கணவா் சுரேஷ்குமாரிடம் பொதுமக்கள் பல்வேறு புகாா்களைக் கூறவே, அவா் அங்கிருந்து சென்றுவிட்டாா். பின்னா் போலீஸாா் அளித்த உறுதியைத் தொடா்ந்து மறியலை கைவிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com