சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.14 கோடி கிடைத்துள்ளது.
தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி,
திங்கள்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் பணியாளா்கள், சமயபரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பணியாளா்கள் உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா்.
இதன் முடிவில், திறக்கப்பட்ட 22 உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே
41 லட்சத்து 52 ஆயிரத்து 635 ரூபாய் ரொக்கம், 2 ,879 கிராம் தங்கம், 5,197 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 112 ஆகியவை கிடைத்துள்ளதாக
திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.