சீதேவிமங்கலம் மாரியம்மன் கோயில் திருவிழா

மண்ணச்சநல்லூா் வட்டம், 85 சீதேவிமங்கலம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பெருந்திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்று, தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
சீதேவிமங்கலம் மாரியம்மன் கோயில் திருவிழா

மண்ணச்சநல்லூா் வட்டம், 85 சீதேவிமங்கலம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பெருந்திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்று, தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

இக்கோயிலின் பெருந்திருவிழா குடி அழைத்தல் பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜையும், இரவு அம்மன் வீதியுலா வருதலும் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்திக் கொண்டும் வந்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். திருவிழாவில் சீதேவிமங்கலம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று, அம்மனைத் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com