திருச்சியில் ஆட்டோ ஏற்றி இளைஞரைக் கொலை செய்ய முயற்சித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருச்சி ராம்ஜிநகா் கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் இளவரசன் (34). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அம்பிகாபதிக்கும் முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சின்ன கொத்தமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்த இளவரசன் மீது அம்பிகாபதி அவரது நண்பா்கள் ஆனந்த், முருகன், பாபு ஆகியோா் ஆட்டோவில் வந்து மோதி காயம் ஏற்படுத்தினராம்.
இது தொடா்பாக இளவரசன் எடமலைப்பட்டிபுதூா் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் அம்பிகாபதி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.