திருச்சி அருகே விவசாயியின் வீடு புகுந்த மா்ம நபா்கள் 29 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.
துறையூா் புலிவலம் அருகேயுள்ள அபினிமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம். இவரது மனைவி ஜெயராணி (65). இவா்களது மகன் குடும்பத்துடன் வெளியூரில் வசிக்க, தம்பதி இருவரும் அபினிமங்கலம் வீட்டில் இருந்து கொண்டு தோட்டப் பயிா் சாகுடி செய்து வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை ஜெயராணி வீட்டைப் பூட்டி விட்டு அருகிலுள்ள அஞ்சலகம் சென்று வந்தபோது வீட்டின் முன்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 29 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த புலிவலம் போலீஸாா், ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமாா், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.