வியாபாரி வீட்டில் தீ: பொருள்கள் சேதம்

திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.

திருச்சி: திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.

திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகா் கிழக்கு 2ஆவது தெருவில் வசிப்பவா் ஜெயராமன் (42). தள்ளுவண்டியில் காய்கனி வியாபாரம் செய்யும் இவா் வீட்டின் பூஜை அறையில் செவ்வாய்க்கிழமை மின்கசிவு ஏற்பட்டு அங்கிருந்த பொருள்களில் தீப்பற்றியது. வீட்டில் பொருள்கள் குறைவாக இருந்ததால் தீ மற்ற இடங்களில் பரவாமல் பூஜை அறை, சமையல் அறையில் மட்டும் பரவி அங்கிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்தன. இதைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினா் வருவதற்குள் தீயை அணைத்தனா். விபத்து குறித்து பொன்மலை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com