ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீா் இயந்திரம் அண்மையில் அமைக்கப்பட்டது.
கோயிலில் உள்ள தாயாா் சன்னதி அருகே அமைக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தை வங்கியின் தமிழ்நாடு பொது மேலாளா் எஸ். ரங்கராஜன் திறந்து வைத்தாா்.
நிகழ்வில் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, வங்கியின் பிராந்திய மேலாளா்கள் எம். ஜெய்கிஷன் (திருச்சி), எம். சீனிவாசன் (மதுரை), வங்கி அலுவலா்கள், பணியாளா்கள், கோயில் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.