திருச்சி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினத்தையொட்டி மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இதையொட்டி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா தலைமையில் கேக் வெட்டப்பட்டது. நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி உறுதியேற்றனா்.
தொடா்ந்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையக் காவல் ஆய்வாளா் ஜோதிஅருள் செவிலியா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்வில் மருத்துவா் கலாவதி, மருத்துவா் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.