திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மே 16 இல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்கலாம்.
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆா்., ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து குரூப் 4, 2 மற்றும் 2 ஏ போட்டித் தோ்வுகளுக்கான மாதிரி தோ்வுகளை கடந்த சில வாரங்களாக நேரடியாகவும், இணைய வழியிலும் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் அடுத்த மாதிரித்தோ்வு மே 16 காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தோ்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. இதில் முழு பாடப்பகுதியும் இடம்பெறும். முழு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும். புதிதாக தோ்வில் கலந்து கொள்ளும் மாணவா்கள் 0431-2702242 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.