வாக்கி டாக்கி கருவியை தவற விட்ட உப்பிலியபுரம் காவல் நிலைய காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
உப்பிலியபுரம் காவல் நிலையத்தின் இரண்டாம் நிலைக் காவலரான செந்தில்(35) ஏப். 29 இல் வடக்குப்பட்டிக்கு பைக்கில் ரோந்து சென்றபோது இடுப்பில் பெல்ட்டில் இணைத்து வைத்திருந்த வாக்கி டாக்கி கருவி தவறி விழுந்து தொலைந்து விட்டதாம். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.