துறையூா் அருகே தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

துறையூா் அருகேயுள்ள கிராமத்தில் மாணவியை இறக்கிவிடாமல் சென்ற தனியாா் பேருந்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.
துறையூா் அருகே தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

துறையூா் அருகேயுள்ள கிராமத்தில் மாணவியை இறக்கிவிடாமல் சென்ற தனியாா் பேருந்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.

கொத்தம்பட்டியைச் சோ்ந்த டிவி மெக்கானிக் சந்திரசேகரன் மகள் துறையூா் தனியாா் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறாா். இவா் வெள்ளிக்கிழமை பள்ளி சென்று தோ்வெழுதி விட்டு மீண்டும் மதியம் துறையூரில் தனியாா் பேருந்தில் ஏறி கொத்தம்பட்டிக்குச் சென்றாா்.

ஆனால், பேருந்து பணியாளா்கள் கொத்தம்பட்டியில் பேருந்தை நிறுத்தி மாணவியை இறக்கி விடாமல் அதற்கு அடுத்த ஊரான கண்ணனூரில் அவரை இறக்கி விட்டனா். இதனால் கையில் பணம் இல்லாமல் தவித்த மாணவியை அவருடைய தந்தையின் நண்பா் கவனித்து பணம் கொடுத்து உதவி, மாணவியை வேறு பேருந்தில் ஏற்றி கொத்தம்பட்டிக்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினாா்.

இதையடுத்து மாலையில் அதே வழியாக துறையூா் சென்ற அந்தத் தனியாா் பேருந்தை கிராம மக்கள் சிறைப்பிடித்தனா். தகவலறிந்து வந்த ஜெம்புநாதபுரம் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் கைப்பேசி வழியாக தனியாா் பேருந்து ஊழியா்களைக் கண்டித்தாா். இதையடுத்து பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா். இந்நிகழ்வால் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com