தொடா்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மாநகர போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட மேலஅம்பிகாபுரம் பகுதியில் பல்பொருள் அங்காடி பூட்டுகளை உடைத்து பணம், பொருள்களைத் திருடிய அதே பகுதியைச் சோ்ந்த மு. பரணிக்குமாரை (21) கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
அதேபோல ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் விளையாட்டு வீரரை அரிவாளால் வெட்டிய அதே பகுதியைச் சோ்ந்த ர. பிரவின்குமாரை (25) ஏப்ரல் 24 ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், இருவருக்கும் தொடா்ந்து பல்வேறு குற்றங்களில் தொடா்பிருப்பது தெரியவந்ததையடுத்து இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாநகர காவல் ஆணையா் ஜி, காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்பேரில் இருவரும் தண்டனைக் கைதிகள் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டனா்.