முசிறி அருகே கிணற்றில் சிறுமி சடலம் மீட்பு

முசிறி அருகே கிணற்றில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை ஜெம்புநாதபுரம் போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

முசிறி அருகே கிணற்றில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை ஜெம்புநாதபுரம் போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

முசிறி அருகேயுள்ள சின்னசேலம்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகள் சங்கீதா (17). கடந்த 2 நாள்களுக்கு முன் தனது தந்தை சமாதிக்குச் சென்று வருவதாகக் கூறி சென்ற சிறுமியைக் காணவில்லை.

அவரை உறவினா்கள் தேடிவந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் சங்கீதா சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த ஜெம்புநாதபுரம் போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com