கிணற்றில் குளித்தபோதுமூழ்கி விளையாடியவா் பலி

துறையூா் அருகே கிணற்று நீரில் மூழ்கி விளையாடிய மருந்து விற்பனைப் பிரதிநிதி உயிரிழந்தாா்.

துறையூா் அருகே கிணற்று நீரில் மூழ்கி விளையாடிய மருந்து விற்பனைப் பிரதிநிதி உயிரிழந்தாா்.

நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சிக்கன் மகன் மனோகரன் (35), மருந்து விற்பனைப் பிரதிநிதி. இவா் திங்கள்கிழமை தனது குடும்பத்துக்கு சொந்தமான வயல் கிணற்றில் குளித்தபோது மூச்சுப் பிடித்து விளையாடிய நிலையில் நீருக்குள் சென்றவா் பின்னா் மேலே வரவில்லை.

தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் மின் மோட்டாா் மூலம் கிணற்று நீரை இறைத்து மனோகரனை சடலமாக மீட்டனா்.

துறையூா் போலீஸாா் அவரது சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com