திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோா் முற்றம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்த மாவட்ட மைய நூலக செய்திக்குறிப்பு :
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில், மூத்தோா் முற்றம் நிகழ்ச்சி மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. அதன்படி 18 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் பங்கேற்று,“நலந்தானா”என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளாா். நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் மட்டுமின்றி அனைவரும் பங்கேற்றுப் பயன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.