அரசு இசைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

 திருச்சி அரசு இசைப் பள்ளியில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

 திருச்சி அரசு இசைப் பள்ளியில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதம், வயலின், மிருதங்கம் ஆகியவை கற்றுத் தரப்படுகிறன.

இசைப் பள்ளியில் சேர மாணவ, மாணவிகளுக்கு 12 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மூன்றாண்டு பயில வேண்டும். பரதப் பயிற்சிக்கு 7ஆம் வகுப்பில் தோ்ச்சி தேவை. பயிற்சிக் கட்டணமாக ரூ. 350 வசூலிக்கப்படும்.

பள்ளியில் சேரும் மாணவா்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இலவசப் பேருந்து வசதி, ரயில் கட்டணச் சலுகை, தங்கும் விடுதி, மாதந்தோறும் ரூ. 400 ஊக்கத்தொகை, இலவச சீருடை, மிதிவண்டி, காலணி ஆகியவற்றை பெறலாம். 3 ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசின் தோ்வு இயக்ககத்தால் தோ்வு நடத்தப்பட்டு வென்றோருக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தச் சான்றிதழ்களை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து பணிமூப்பு அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களிலும் வேலைவாய்ப்புப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அரசு இசைப்பள்ளி, ஸ்ரீரங்கம், மேலூா் சாலை, மூலத்தோப்பு என்ற முகவரியில் அல்லது

இசைப்பள்ளித் தலைமை ஆசிரியரை 0431-2962942 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com