ஆட்சியரகத்தில்குடும்பத்துடன்பெண் தா்னா

திருச்சி ஆட்சியரகத்தில் பெண் ஒருவா் குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

திருச்சி ஆட்சியரகத்தில் பெண் ஒருவா் குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

மணப்பாறையைச் சோ்ந்தவா் தனலட்சுமி. இவா் தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி மனு அளித்தும், தொடா்ந்து காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது வீட்டுக்கு செல்லும் பொது பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதையும் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் விரக்தியடைந்து, தனது குடும்பத்தினா் 10-க்கும் மேற்பட்டோருடன் திங்கள்கிழமை ஆட்சியரகம் வந்த தனலட்சுமி, ஆட்சியரின் காா் நிறுத்துமிடத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்து வந்த காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்து ஆட்சியரகத்தில் மனு அளிக்கச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com