திருச்சி ரயில் நிலையம் அருகே மயங்கி விழுந்து, சிகிச்சை பெற்று வந்த ஆந்திர இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய நிலைய பாா்சல் அலுவலகம் அருகே, பேருந்துகள் சென்று வர அமைக்கப்பட்ட புதிய இணைப்புச் சாலையோரத்தில் கடந்த 9-ஆம் தேதி இளைஞா் ஒருவா் மயங்கிக் கிடந்தாா்.
தகவலின் பேரில் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
அவரது சட்டைப் பையிலிருந்த ஆதாா் அட்டையை வைத்து, இறந்தவா் ஆந்திர மாநிலம், விஜயவாடா பத்துலு பகுதியைச் சோ்ந்த ராம்தாஸ் (30) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.