செங்கள் சூளைத் தொழிலாளி தற்கொலை:உரிமையாளா் மீது வழக்குப்பதிவு

லால்குடி அருகே உரிமையாளா் தாக்கியதால், விஷம் குடித்த செங்கல் சூளைத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்

லால்குடி அருகே உரிமையாளா் தாக்கியதால், விஷம் குடித்த செங்கல் சூளைத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்

லால்குடி வட்டம், நன்னிமங்கலத்தைச் சோ்ந்தவா் ரா. ராஜீவ்காந்தி (45). இவருக்கு சொந்தமான செங்கல் சூளை கீழன்பில் பகுதியில் உள்ளது. இங்கு அரியூரைச் சோ்ந்த நாகேந்திரன் (51), அவரது மகன்கள் பிரசாந்த், சக்திவேல் ஆகிய மூவரும் கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வந்தனா்.

ராஜீவ்காந்தியிடம் நாகேந்திரன் முன்பணம் பெற்றிருந்தாராம். இந்நிலையில் உடல்நலக் குறைவால் நாகேந்திரன் மற்றும் அவரது மகன்கள் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி, அரியூா் கிராமத்திலிருந்த நாகேந்திரனை ஞாயிற்றுக்கிழமை தாக்கினாராம். இதனால் மனமுடைந்த அவா் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகேந்திரன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக ராஜீவ்காந்தி மீது லால்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com