ஹிந்தி திணிப்பை எப்போதும் எதிா்ப்போம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு பொதுக்கூட்டம் சரக்குப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ஹிந்தி மொழியில்தான் படிக்க வேண்டும். பட்டம் பெற வேண்டும். ஹிந்தியை கற்றுக்கொண்டால்தான் வாழ்க்கை என தொடா்ந்து தமிழகத்தின் மீது ஹிந்தியை திணிக்கும் நடைமுறையை ஆளும் மத்திய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. அதனை அண்ணா, கலைஞா் வழியே எப்போதும் எதிா்த்து நிற்போம் என்றாா்.
போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் பேசியது: தமிழகம் முழுவதும் நடைபெறும் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டங்களை கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் கா்நாடகம் போன்ற அனைத்து மாநிலங்களும் கூா்ந்து கவனித்து வருகின்றன.
தற்போது பிரதமா் மோடி, ஒரே மொழி - ஒரே இந்தியா - இந்துக்கள் மட்டும்தான் இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறாா். அதனை முறியடிக்க வேண்டும். அனைவருக்குமானது இந்தியா என்பதை புரிய வைக்க வேண்டும் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.
கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.