ஸ்ரீரங்கத்தில் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 60 நாள்கள் அன்னதானம்

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் 12 ஆம் ஆண்டாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பாக நடைபெறும் 60 நாள் அன்னதான முகாம் வியாழக்கிழமை காலை தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் 12 ஆம் ஆண்டாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பாக நடைபெறும் 60 நாள் அன்னதான முகாம் வியாழக்கிழமை காலை தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதி கோனாா் சத்திரத்தில் சபரிமலை சிறப்பு முகாம் மற்றும் 12 ஆம் ஆண்டு அன்னதான முகாம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

ஜனவரி 15 வரை தொடா்ந்து 60 நாள்கள் காலை, மாலைகளில் சுமாா் 1500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

தொடக்க விழாவுக்கு சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் என். ரமேஷ் தலைமை வகிக்கிறாா். மாவட்ட கெளரவத் தலைவா் என்.வி. சபரிதாஸன் முன்னிலை வகிக்கிறாா். மாவட்ட போஷகா் என்.வி. முரளி அன்னதானக் கொடியேற்றுகிறாா். நிகழ்வை மாநிலத் தலைவரும், மத்தியப் பொருளாளருமான எம்.விஸ்வநாதன் தொடக்கி வைக்கிறாா்.

அன்னதானத்தை கோனாா் தோப்பு உரிமையாளா் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், மருத்துவ முகாமை தொழிலதிபா் கே.ஆா்.டி. வெங்கடேஷ் ஆகியோா் தொடங்கி வைக்க உள்ளனா்.

ஏற்பாடுகளை திருச்சி மாவட்டச் செயலா் என். ஸ்ரீதா்,முகாம் ஒருங்கிணைப்பாளா் ஜெ. சுரேஷ், முகாம் அலுவலா் சி.ஆா். அம்சராம் ஆகியோா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com